பத்ரி,
நீங்கள் தாராசுரம் கோயிலையும் சென்று பார்த்திருக்க வேண்டும். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. ராஜேந்திர சோழனின் மகள் வழிப்பேரன் ராசாதிராச சோழன் கட்டியது என நினைவு. அப்படியே தஞ்சையின் மினியேச்சர் மாதிரி இருக்கும். நுணுக்கமான பல சிற்பங்கள் உண்டு.
தாராசுரம்,என்னுடைய படங்கள்
http://picasaweb.google.co.in/saimagesh/Darasuram#
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நானும் எனது நண்பன் ஒருவனும் பெங்களூரிலிருந்து கிளம்பி தஞ்சை,தாரசுரம் மற்றும் க.கோ.சோழபுரம் மூன்றையும் கண்டோம். மூன்று இடங்களிலும் Archeology துறையிலிருந்து கைடுகளை அமைத்துக்கொண்டோம். அருமையான அனுபவம்.
தஞ்சை பெரியகோயிலே முழுமையான அளவில்(entirety) சிறப்புடையதாக இருக்கிறது. தாராசுரம் சிறிய அளவிலான நுட்பமான சிற்பங்களுக்கு சிறப்புடையது. க.கொ.சோ. ஒரு சில சிற்பங்களைத்தவிர அக்கோயிலை மற்ற இரண்டு கோயில்களுடன் ஒப்பிடமுடியாது. ராஜேந்திரனின் கவனம் போர்களில்தான் இருந்தது.
ராஜேந்திரனும் ராசாதிராசனும் தங்களுக்கும் ஒரு பெயர் சொல்லும் நிலைபெற்றிருக்கக் கூடிய அடையாளம் வேண்டும் என்று நினைத்ததால் இக்கோயில்களை கட்டினர் என்றும் ஆனால் தங்கள் மூதாதையினரின் சிறப்பை குறைத்துவிடக்கூடாதென கோபுரத்தின் உயரத்தை குறைத்ததாகவும் சொல்லுவர். ஆம், தாராசுரம் க.கொ.சோ.வை விட உயரம் குறைவு.
தஞ்சை மற்றும் க.கொ.சோ.வின் படங்கள்
http://picasaweb.google.co.in/saimagesh/TanjavurBrahadeeswareTemple#
http://picasaweb.google.co.in/saimagesh/GangaiKondaChozhapuram#
பத்ரியின் பதிவில்(http://thoughtsintamil.blogspot.com/2010/09/vs-1.html) இட்ட பின்னூட்டம் இது!
Friday, October 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment